Wednesday, December 17, 2008

எல்லாவற்றிற்கும் ஆசைப்படு

ஆசையே மனிதனின் அழிவிற்கு காரணம் என்று பள்ளிப்பருவத்தில் படிக்கும் பொழுது எப்பொழுதோ காதால் கேட்ட ஞாபகம் உண்டு. ஆனால் இன்னாளில் ஒரு மகான் " எல்லாவற்றிற்கும் ஆசைப்படு " என்று சொன்னதாக ஒரு வாரப் பத்திரிக்கையில் படித்து விட்டு எனது நண்பன் ஒருவன் இன்ன விஷயம் என்றில்லாமல் எல்லாவற்றிற்கும் ஆசைப்பட ஆரம்பித்தான்.

சைக்கிளில் போய்க் கொண்டிருந்த அவன் வெளி நாட்டு காருக்கு ஆசைப்பட்டு தெருவில் நின்று கொண்டிருந்த காரை தடவிப் பார்க்க அது அலறி காருக்கு உரிமையாளரையும் கூடவே போலீஸையும் அழைத்தது. அங்கிருந்து நகன்று ஆபீஸை நோக்கி போகும் பொழுது தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த அழகான் பெண்களை பார்த்து இவள் போல எனக்கு மனைவி அமைந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டே போய் சைக்கிளை எதிரில் வந்து கொண்டிருந்த ஆட்டோவில் மோதி அடி வாங்கி இருக்கிறான்.

மதிய உணவு இடைவேளையில் எல்லோரும் அவரவர் டிபனை திறக்க இவன் மட்டும் மானேஜரைப் போல ஓட்டலில் இருந்து வாங்கி சாப்பிட ஆசைப்பட்டு தனது ஒரு வார சம்பளத்தை ஒரு வேளை உணவாக்கி நொந்து போய் வீட்டிற்கு வந்தால் வாடகை பாக்கியை வசூல் செய்ய வீட்டுக்காரர் வந்து நின்றிருந்தார். மறு நாள் சொந்த வீடு வேண்டி வங்கியில் லோனுக்கு அலைந்து திரிந்ததில் லோன் கிடைக்கவில்லை. கையிருப்பு தான் காணாமல் போயிருந்தது.

தனது நிலைமையை எண்ணி நொந்து என்னிடம் வந்து குமுறலை கொட்டித் தீர்த்தான். நானும் அவனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசமும் செய்தேன். அந்த மகான் எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்று சொன்னாரே தவிர எந்தமனிதன் , எதற்கெல்லாம் , எவ்வாறு , எவ்வளவு தூரம் ஆசைப்படலாம் என்று சொன்னதை நீ கவனிக்கத் தவறியது உன் குற்றம் தான். இனி மேலாவது பார்த்து நடந்து கொள் என்று அவனுக்கு உபதேசம் சொல்லி அவனை தேற்றி அனுப்பி வைத்தேன்.

சிறிது நேர சிந்தனைக்குப் பின் இதே போல நாம் நிறையப் பேருக்கு அன்பாகவும் , அழகாகவும் உபதேசம் செய்தால் போதுமே நாமும் ஒரு மகான் ஆகி விடலாம். நமக்கு பின்னாலும் ஒரு கூட்டம் வரும். மாலை , மரியாதை , அரசியல்வாதிகளின் நட்பு , பணக்காரர்களின் டொனேஷன் என சகலவிதமான வசதிகளும் வந்து சேருமே என்று நினைத்து புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தேன்.

சீச்சீ........ நானும் " எல்லாவற்றிற்கும் ஆசைப்படுகிறேனோ "?

Saturday, October 18, 2008

அரிது........அரிது

அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது என்று அந்தக் காலத்தில் யாரோ சொல்லி

விட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால் இவ்வுலகில் , இல்லை...... இல்லை.......

இந்தியாவில் மானிடராய் பிறப்பது எளிது. அதிலும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறப்பது

என்பது மிகவும் எளிது.


நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்து . நாட்டு நடப்பை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல்

வளர்ந்து . நாலு பேர் மெச்சிக் கொள்ளும் விதமாய் நல்ல மனிதன் என்று பெயர் எடுப்பது

தான் மிகவும் கடினம்.

இந்த அக்னி பரீட்சையில் தன்னைத் தானே உட்படுத்திக் கொண்டு உயிருடன்

வெளிவருவதற்கு முன்பாக ஒவ்வொரு மனிதனும் படும்பாட்டை வார்த்தைகளில் வடிக்க

வேண்டும் என்றால் இந்த ஜென்மம் ஒன்று போதாது.


இவ்வளவு அரிதான மானிட ஜென்மம் எடுத்து கஷ்டப்படுவதை விட மானிடராய்

பிறக்காமல் இருப்பதே மிகவும் அரிதாகும்.

Tuesday, March 4, 2008

பொறுத்திரு மனமே

கடல் மணலையும், விண்மீன்களையும் எண்ண முடியுமா? கடல் அலைகளை கை கொண்டு நிறுத்த முடியுமா? காற்றை கண் கொண்டு பார்க்க இயலுமா? கற்பனையில் மட்டுமே வாழ முடியுமா? கனவை படம் பிடித்து பார்க்க இயலுமா? கண்ணாடியில் நாம் பார்க்க அதில் வேறு முகம் தெரியுமா? நெருப்பை மட்டுமே உணவாக கொள்ள முடியுமா? கடந்து போன நேரத்தை மீட்டு வர முடியுமா? இருட்டில் இருந்து கொண்டு படிக்க முடியுமா? வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை திரும்பி வரச் செய்ய முடியுமா? இவையெல்லாம் என்றைக்கு சாத்தியமாகிறதோ அன்றைக்கு ஒரு பெண்ணின் மன ஆழத்தையும், எண்ணங்களையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அது வரை மனமே உன்னல் முடிந்தால் பொறுத்திரு.

ஏக்கம்

ஏக்கம் என்பது வெகு நாள் ஆசை நிறைவேறாததன் வெளிப்பாடா? ஏக்கம் வந்து விட்டால் மனிதனின் தூக்கம் பறி போய் விடுமோ? தூக்கம் கெட்ட மனிதனின் மன ஊக்கம் குறைந்து விடுகிறதே. ஊக்கம் இல்லாமல் ஆக்கம் கெட்டுப் போய் நோக்கும் எதிலுமே மனம் லயிக்காமல் கடிவாளம் இல்லா குதிரை போல் மனம்காட்டிற்க்கும் மேட்டிற்க்கும் அலைகிறதே. அப்படி அலைவதால் மனமும் உடலும் நொந்து, நோயை முதலில் நாடி, அதன் பின் சாவை நாடும் முன் என் ஏக்கத்தைப் போக்கி தூக்கத்தை கொடு என்று காக்கும் கடவுளை வேண்டுவதையே வேலையாக்கிக் கொண்டிருக்கிறேன்.

ரெண்டே நிமிஷத்தில கதாநாயகன் ஆயிட்டம்ல

ரெண்டே நிமிஷத்தில கதாநாயகன் ஆயிட்டம்ல.ரொம்ப நாளைக்கு முன்னால பஞ்சாபிலும், ஜம்மு காஷ்மீரிலும் தீவிரவாதிகளின் கை ஓங்கி இருந்திச்சு. சென்ட்ரல் கவர்மென்ட்டால எதுவுமே செய்ய முடியல. அப்படிப்பட்ட நேரத்துல நான் ஜம்மு போயிருந்தேன். ஜம்முல வேலைய முடிச்சிக்கிட்டு டெல்லி கிளம்ப பார்த்தா பஸ் ட்ரெயின் எல்லாம் பேக் ஆயிடுச்சி. அப்பால இன்னா பண்ணேன்ணு கேட்கிறீகளா? கவர்மென்டு பஸ் ஒண்ணுல ஏறி நின்னுக்கிட்டே டெல்லி போயிடலாம்னு தைரியமா ஏறிட்டேன். பஸ்ல முக்கால்வாசி பேர் உக்கார்ந்திருந்தாந்க. நான் காலியாக இருந்த ஒரு ஸீட்டுக்குப் பக்கத்தில என் பெட்டியை வச்சிட்டு டாய்லெட்டுக்குப் போய் வந்திடலாமேன்னு போனேன். நான் கீழே இறங்கினதுமே அந்தக் காலியாக இருந்த ஸீட்டில உட்கார ஒரு ஆள் வந்திருக்காரு.என்னோட பெட்டியை காண்பிச்சி இது யாருதுன்னு கேட்க மற்ற பயணிகள்லாம் எங்களோடது இல்லைன்னு சொல்லி இருக்காங்க. அந்த பயணி உடனே கொஞ்சமும் யோசிக்காம கீழே போய் போலீஸை கூட்டி வந்து இந்த பெட்டி அனாதையா கெடக்கு, உள்ள பாம் இருந்தா இருக்கும்னு சொல்ல, போலீஸ்காரர் பயந்து போய், நான் பாம்ஸ்குவாடுக்கு போன் பண்றேன்னு பஸ்ஸை விட்டு கீழே இறங்க, பஸ்ல இருந்த பயணிங்க அத்தனை பேரும் வாசல் வழியாகவும் ஜன்னல் வழியாகவுமா அவங்கவங்க பெட்டியை எடுத்துக்கிட்டு கீழே இறங்கி பஸ்ஸை விட்டு தூரமா போய் நின்னுக்கிட்டாங்க. டாய்லெட்டுக்குப் போய் விட்டு வந்த நான் பஸ் காலியாக இருக்கிறத பார்த்து திரு திருன்னு பாண்டியராஜனை மாறி முழிச்சிக்கிட்டு கூட்டமா நின்னுக்கிட்டு இருந்த பயணிகள் பக்கத்தில போய் ஒரு பெருசுகிட்ட பஸ் ஏன் காலியாயிடுச்சு ரிப்பேரா? வேற பஸ் வருதான்னு ஒண்ணும் தெரியாம கேட்க, அதுக்கு அந்தப் பெருசு பஸ்க்கு உள்ளே ஒரு அநாதைப் பொணம்.. சீச்சீ.. பெட்டி கிடக்கு. அதுல பாம் இருக்கு என்றார். எனக்கு பகீர் என்றது. உடனே நான் பெருசுகிட்ட அய்யய்யோ என் சூட்கேஸும் உள்ள தான் இருக்கு எடுத்துக்கிட்டு வந்துடறேன் என்று சொல்லி விட்டு ஓடிப் போய் பஸ்ஸுக்குள் ஏறி என் ஸூட்கேஸை எடுத்துக்கிட்டு இறங்கினதும் அத்தனை பேரும் இது உன்னோடதா என்று ஒன்றாக கூச்சல் போட்டனர். அதுக்குள்ள போலீஸ்காரரும் வந்து பெட்டிய தெறந்து காமின்னார். நானும் பெட்டிய தெறந்து காண்பிச்சு என்னோட விசிட்டிங் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் எல்லாத்தையும் காண்பிச்சு டெல்லிக்கு அவசரம போகணும்னு சொன்னேன். அதுக்குள்ள பஸ் டிரைவர், கண்டக்டர் எல்லாம் வந்து காச் மூச்சுன்னு கத்தி பிறகு பயணிகள் எல்லோரும் பஸ்ல உட்கார்ந்தாங்க. ஸீட் கிடைக்காம நின்னுக்கிட்டு போகணுமேன்னு நினைச்சிக்கிட்டு இருந்த எனக்கு என் பெட்டியில் பாம் கீம் எதுவும் இல்லைன்னு தெரிஞ்சதும் பயணிகள் எல்லாரும் சந்தோஷப்பட்டு அந்தப் பெருசு தலைமையில கண்டக்டர் கிட்டே பேசி எனக்கு கண்டக்டர் ஸீட்டை வாங்கி கொடுத்து உட்காரச் சொன்னாங்க. எனக்கு ஸீட்டை குடுத்துட்டு பாவம் கண்டக்டர் நின்னுக்கிட்டே வந்தாரு. பயணிகளுக்கு நல்ல டைம் பாஸ் ஆனதுல நான் முழு பஸ்லேயும் கதாநாயகனா ஆயிட்டேன்ல. அப்புறமா மிட்வேயில நான் சாப்பிடும் போது கண்டக்டருக்கு என் காசுல சாப்பாடும் டீயும் வாங்கிக் கொடுத்தது தனிக்கதை.


பின் குறிப்பு :- இந்த போஸ்ட் அன்புடன் அருணாவின் ப்ளாக்க ரெகுலர படிச்சதன் பாதிப்புங்கோ. மனசுல உறங்கிக் கெடந்த சம்பவத்தை வார்த்தையருவியோ கொட்ட வச்சதுக்கு அருணாம்மாவுக்கு நன்றிங்கோ..

Monday, March 3, 2008

மறு பக்கம்
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல இவ்வுலகில் எந்தவொரு விஷயத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. அதையே நாம் மறுபக்கம் என்கிறோம். வெற்றி தோல்வி, உண்டு இல்லை, இன்பம் துன்பம் இப்படி எல்லாவற்றிற்கும் மறுபக்கம் என்று ஒன்று இருக்கிறது. பொதுவாக நம்மில் பலர்(என்னையும் சேர்த்து) எதிலும் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துக்கொண்டு அது தான் முடிவு இதைத் தவிர வேறு வழி இல்லை என் நினைத்து விடுகிறோம். எல்லா விஷயத்திலும் அந்த மறுபக்கத்தை எப்படிப் பார்ப்பது என்பது கம்பசூத்திரமாகத் தான் தெரிகிறது.இன்றைய இயந்திர வாழ்க்கையில் மனிதன் தினம் தினம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் மறுபக்கத்தைத் தேடி அலசி ஆராய ஆரம்பித்தால் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் போதாதே. அப்படியென்றால் இதற்கு என்ன தான் வழி. மறு பக்கத்தை எளிதில் பார்த்து முடிவு எடுக்க யாரேனும் உதவுங்களேன் ப்ளீஸ்.

Saturday, March 1, 2008

மழை
வானமெனும் களந்தனிலே
மேகமெனும் வீரர்கள் தான்
கூடலெனும் போரினிலே
சிந்துகின்ற குருதிகள் தான்
மழையெனப் பெய்திடுமோ?
மாதேவன் விளையாட்டோ?
இரண்டு மனம்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் என்று பாடினான் ஒரு கவிஞன். மனம் என்பது மூளைக்குக் கட்டுப்பட்டதா? அல்லது தனித்து இயங்கக் கூடியதா? சில நேரங்களில் மனம் நமது மூளையின் கட்டளையைக் கூட ஏற்க மறுக்கிறதே! நினைக்கவும் மறக்கவும் தெரிந்த இந்த மனத்தின் தராசுத் தட்டுக்கள் சரிசமமாக அல்லவா இருக்க வேண்டும். என் மனத்தின் நினைக்கும் தட்டு எடையே இல்லாமல் உயர்ந்தும், மறக்கும் தட்டு அதிக எடையுடன் தாழ்ந்தும் இருக்கிறதே. நினைக்க வேண்டிய பல நல்ல விஷயங்கள் வழுகி விடுகின்றன. மறக்க நினைக்கும் சில விஷயங்கள் பாறாங்கல்லாய் சம்மணம் போட்டு அமர்ந்து அழுத்துகின்றதே. தராசுத் தட்டுக்களை சரிசமப்படுத்த முடியாது என்பதால் தானோ என்னவோ ஒரு மனதை வைத்து உயிர் வாழ்வது கடினம் என்று இரண்டு மனம் கேட்டு இருக்கின்றானோ?.

Friday, February 29, 2008

மலர் அஞ்சலி
பிரபல தமிழ் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவுக்கு நான் செலுத்தும் மலர் அஞ்சலி இது.அந்தக் காலம் முதல் நேற்று வரை தமிழ் வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அவர் எழுதாத விஷயமே இல்லை எனலாம். பொரியியல், புதுக்கவிதை, மரபுக்கவிதை, தொடர்கதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி-பதில், நாடகம், சினிமா, சரித்திரம் என அனைத்துத் துறையிலும் தனது முத்திரையைப் பதித்தவர். அவர் கணிணியைப் பற்றி எளிய நடையில் சொல்லிக் கொடுத்ததை கைக்குழந்தை கூட புரிந்து கொள்ளும். அவரது சரளமான எழுத்து நடை பாமரனையும் படிக்கத் தூண்டும். அவரது கதை, கட்டுரை, கவிதைகளைப் படித்து என் இளம் பிராயத்தில் நானும் புதுக் கவிதைகள் பல எழுதி இருக்கிறேன். அவரது கணேஷ் வசந்த் பாத்திரங்கள் காலத்தால் அழியாதவை. இப்படி இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். அவரது புகழ் நிலைத்து நிற்கும் தமிழ் இனம் உள்ளவரை.

Thursday, February 28, 2008

இனியொரு உலகம் இறைவனால் படைக்கப்பட்ட இந்த உலகத்தை மனிதன் தாறுமாறாக மாற்றி அமைத்து விட்டதால் நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் வேறு ஒரு புதிய உலகைப் படைக்க வேண்டி. அந்தப் புது உலகத்தில் வற்றாத நதியும், ஆறும், நீர்வீழ்ச்சியும் வேண்டும். வெட்ட முடியாத மரம் செடி கொடிகள் வேண்டும். என்றுமே வாடாத மலர்கள் வேண்டும். மாசு இல்லாத காற்று வேண்டும். மனிதனை மனிதன் நேசிக்கும் நல்ல இதயம் வேண்டும். அராஜகப் போக்குடன் அரசியல் செய்பவர்கள் இல்லாமல் அந்தந்த ஊரில் வசிப்பவர்கள் அவர்களுக்குள் வரிவசூல் செய்து அந்தந்த ஊரில் அவர்களது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். ஆணுக்குப் பெண் அடிமை என்றில்லாமல் ஆணும் பெண்ணும் சமமாக இருக்க வேண்டும். அடிக்கும் கைகள் இல்லாமல் அணைக்கும் கைகள் மட்டுமே வேண்டும். எங்கும் எதிலும் இன்பமே வேண்டும். மனிதர்கள் நோய் நொடி இல்லாமல் இறக்கும் பொழுதும் சிரிக்க வேண்டும்.

Tuesday, February 19, 2008

ஒரு விண்ணப்பம்
இதைப் படிக்கப் போகும் நல்ல உள்ளங்களுக்கு என் முதல் வணக்கம். முடியாது, இல்லை போன்ற
சொற்களை நமது வாழ்க்கையில் இருந்து அகற்ற முடியும் இதை படித்தால்.
ஒரு நிகழ்வு
ஒரு சிறுவன் தனது 11 வது வயதில் கிணற்றில் குளிக்கப் போய் விபத்து ஏற்பட்டு தனது உடலில் இடுப்புக்குக் கீழே எந்த ஒரு உண்ர்ச்சியும் இல்லாமல் படுத்த படுக்கையாய் கடந்த 25 வருடங்களாக வாழ்க்கையுடன் போராடி நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறான். அவன் பெயர் அந்தோணி முத்து. அவனுடைய தந்தை உயிருடன் இல்லை. தாயாரும் கை கால்களை அசைக்க முடியாமல் படுக்கையில் கிடக்க இவன் அசைய, எழுந்து உட்கார, புரண்டு படுக்க என எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்து இருக்கும் இந்த வேளையில் அவனுடன் பிறந்தவர்கள் அவனை கனிவுடன் கவனித்து வருகின்றனர். அப்படிப்பட்ட நிலையிலும் இன்று 36 வயதாகும் அந்த இளைஞன் கணிணி, இசை ஆகிய துறைகளில் தனது திறமையை வளர்த்துக் கொண்டு சுயமாக சம்பாதித்து தானும் வாழ்ந்து ,தன்னைப் போலவே இவ்வுலகில் இருக்கும் மற்றவர்களுக்கும் உதவ விரும்புகிறான்.
அந்த நிகழ்வின் பின்னணி
கடவுள் தான் படைத்த மனித ஜீவராசிகள் தங்களது மூளையை உபயோகித்து பலப்பல புதுமைகளை கண்டுபிடித்து இயந்திரத்தைவிட அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.
ஆனல் மனிதர்களிடம் இரக்க குணம் எவ்வளவு இருக்கிறது என்று அவரால் கணக்கிட முடியவில்லை.
எனவே மேலே கூறிய அந்த இளைஞனைப் படைத்து அவனுக்கு அப்படி ஒரு கஷ்டத்தையும் கொடுத்து மனிதர்களின் இரக்க குணத்திற்கு பரீட்சை வைத்திருக்கிறான். கடவுள் வைத்த தேர்வு
கடவுள் வைத்த அந்த தேர்வை எழுத மனிதனாய் பிறந்த யாருக்கும் எந்தத் தகுதியும், திறமையும், வயதும்,மதமும் தேவையில்லை.இரக்க குணம் படைத்த அனைவருமே இந்தத் தேர்வில் கலந்து கொள்ளலாம். இந்தத் தேர்வின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே முதல் மார்க் தான். தோல்வி என்பதே கிடையாது.வாருங்கள் நல்ல இதயம் கொண்ட நாம் அனைவரும் இந்தத் தேர்வில் கலந்து கொள்வோம். நாம் எழுதப்போகும் இந்தத் தேர்வைப் பார்த்து விட்டு கடவுள் மனிதர்களின் இரக்க குணத்தை எடைபோட இனிமேலும் இன்னொரு அந்தோணியை படைக்காமல் இருக்கட்டும்.
அந்த இளைஞனின் முகவரி
எஸ்.அந்தோணி முத்து
C/0.ஜே.தர்மராஜ்
5/96,சேரன் தெரு, கே.கே. நகர்,பம்மாது குளம்,ரெட் கில்ஸ்,சென்னை- 52
போன்: 26323185 மொபைல்: 9444496600
இ-மெயில்: அந்தோணிமுத்து@ ஜி.மெயில்.காம்.


பின்குறிப்பு
இரக்க குணம் உள்ளவர்கள் இல்லாமை, இயலாமை காரணமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் நீங்கள் படித்த இந்த நிகழ்வை பலரும் படிக்க உதவி செய்தாலே போதும். அது கூட கோடி கோடி புண்ணியம் தான்.

Monday, February 18, 2008

ஆசை
கடவுளுக்கு கண்ணாடி மாட்டி விட ஆசை. குடையை எடுத்ததும் மழை வர ஆசை. குளிர்ந்த சூரிய வெளிச்சத்தை அனுபவிக்க ஆசை. ஒரேயொரு தீக்குச்சி உரசி குளிரை விரட்ட ஆசை. சைக்கிளில் ரிவர்ஸ் கியர் மாட்ட ஆசை. கண்களை மூடினாலும் காட்சி தெரிய ஆசை. திருமணம் செய்த புதிதில் காட்டும் அன்பை மனைவி கணவனிடம் கடைசி வரை காட்ட ஆசை. வாழ்வில் நடந்த பல இனிய விஷயங்களைரீவைண்டு செய்து மீண்டுமொரு முறை அனுபவிக்க ஆசை. இறக்கப் போகும் நாளை தெரிந்து கொள்ள ஆசை. அதற்குள் வாழ்க்கையை முழூவதுமாக வாழ்ந்து விட ஆசை.
கைம்மாறு
மனிதனாய் பிறந்த அனைவரும் தனக்கு யாராவது நல்லது செய்தால் அதற்குகைம்மாறாக அவர்களுக்கு ஏதாவது பிரதிஉபகாரம் செய்வது வழக்கம்.என் வாழ்வில் அப்படி எதுவும் எனக்கு நடக்காத பொழுது நல்லது நடக்க நீ கடவுளை பிரார்த்தனை செய் உடனே நல்லது நடக்கும் என்றனர்.எனக்கு கடவுள் ஏதாவது நல்லதைச் செய்தால் தானே நான் கடவுளைபிரார்த்தனை செய்து கைம்மாறு செய்ய முடியும்.கடவுளின் செயலுக்காக நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்க என் பிரார்த்தனைக்காககடவுளும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான் போல் தெரிகிறது.இதில் யார் மீது தவறு இருக்கிறது என்று யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்

Saturday, February 16, 2008

நல்ல நேரம்
என்ன செய்ய ஆரம்பித்தாலும் இன்று நல்ல நேரம் எது என்று பார்க்க ஆரம்பிப்பவர்களைகண்டு நான் வியப்படைவேன். எதற்காக இந்த நல்ல நேரம் பார்க்கும் பழக்கம். நாம் தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து வெளியேற நல்ல நேரம் பார்ப்பதுண்டா?பசி காதை அடைக்கும் பொழுது எதிரில் இருக்கும் உணவை சாப்பிட நல்ல நேரம்பார்ப்பதுண்டா? கொத்த வரும் பாம்பைக் கண்டு ஓடுவதற்கு நல்ல நேரம் பார்ப்பதுண்டா?பிறகெதற்கு ம்ற்ற வேலைகளில் மட்டும் நல்ல நேரம் , நல்ல நாள் என்று பார்த்துக்கொண்டு நாட்களையும் நேரத்தையும் கடத்தி வீணடிக்க வேண்டும். எந்த நாளும், எந்த நேரமும் நல்லதே. நாம் மனதில் நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய நினைக்கும் பொழுது. சரி தானே
பழிக்குப் பழி
வாகனங்களும் தொழிற்சாலைகளும் போட்டியிட்டு சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தும் பொழுதும்குடிக்கவும் குளிக்கவும் உபயோகமற்றதாக தண்ணீரை அசுத்தப்படுத்தும் பொழுதும்மரங்களை வெட்டிச் சாய்த்து மணல் வெளியாக்கி வனவிலங்குகளை வேட்டையாடும் பொழுதும்இயற்கையைப் பார்த்து ஏளனமாக சிரிக்கும் மனித இனத்தை சற்றே கோபத்துடன்சுனாமியாகவும், புயலாகவும், வெள்ளமாகவும் பயமுறுத்தும் இயற்கையை மனிதன்கரித்துக் கொட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வினையை விதைத்தால் வினையைஅறுத்துத்தான் தீர வேண்டும்.

Friday, February 15, 2008

பணம் --- பெண்
அன்று முதல் இன்று வரை பணத்திற்கும் பெண்ணிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்து வருகின்றன.பெண்ணை லஷ்மி என்றும் பணத்தை மகாலஷ்மி என்றும் சொல்வர். நிறைய பணத்தை சேர்க்க நினைத்தவனுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை நேசித்தவனுக்கும் வாழ்க்கையில் என்றுமே நிம்மதி இருந்ததில்லை.பணமும் பெண்ணும் வாழ்க்கையில் வருவதும் தெரியாது போவதும் தெரியாது.வாழ்க்கையின் கடைசி வரை வருவதற்கு பணத்திற்க்கும் சரி பெண்ணிற்கும் சரிஉத்தரவாதம் கிடையாது.பணத்தையும் பெண்ணையும் வெறுத்து மறந்தவனை ஈஷ்வரன் என்கின்றனர்.இரண்டையும் கட்டிக் காத்து வாழ்பவனை கோடீஷ்வரன் என்கின்றனர்.எந்த ஒரு ஆணின் வாழ்க்கையிலும் இந்த இரண்டில் எது இல்லையென்றாலும்அவனது வாழ்வை நரகம் என்கின்றனர்.

Friday, February 8, 2008

உண்ணா விரதம்

பிச்சைகாரர்கள் தங்களது நலவாழ்விற்கு அரசு திட்டம் தீட்டும் வரை உண்ணாவிரதம்இருக்க முடிவு செய்து மூன்று நாட்களாகியும் அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.ஏனெனில் அரசு தரப்பில் இருந்து கமிட்டி அமைத்து விவாதித்ததில் அனைவரும் சொன்னதுபிச்சைகாரர்களுக்கு உண்ணாமல் விரதம் இருப்பது ஒன்றும் புதிதல்ல அதை அவர்கள்தொடர்ந்து செய்யட்டும் என்று கூறி விட்டு கமிட்டி மெம்பர்கள் ஒன்று கூடி உண்ணும்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமர் பாலம்

நிலத்திற்கு மேலே கண் எதிரில் உள்ள் மரங்களை வெட்டி சாய்க்கும்கும்பலை ஏனென்று கேட்க யாருமில்லைஆனால் நீருக்கு கீழே இருக்கிற்தா இல்லையா என்றே யாருக்கும்தெரியாத ராமர் கட்டியதாக சொல்லும் பாலத்தை இடிக்கக் கூடாதுஎன்று போராட்டமும் வன்முறையும் வெடிக்கும் இந்த நாட்டில்ஏன் பிற்ந்தோம் என்று நான் வெட்கப்படுகிறேன்.

Thursday, February 7, 2008

நான் ஏன் பிறந்தேன் பள்ளிப் பருவத்தில் தாய் தந்தையை பிரிந்து இருந்ததால் அவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை வாலிபத்தில் திருமணம் நடந்து இன்னும் என் மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என் கூடவே இருந்தாலும் நான் பெற்ற பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ள முடியவில்லை நான் வேலை பார்க்கும் இடத்தில் என் முதலாளியை புரிந்து கொள்ள முடியவில்லை வருங்காலத்தில் நான் என்ன ஆவேன் என்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை என் மனதிற்கு அறிவு இடும் கட்டளை புரியவில்லைஎன் அறிவிற்கு மனதின் நிலை புரியவில்லை நான் ஏன் பிற்ந்தேன் என என்னைப் படைத்த கடவுளுக்கே கூட புரியவில்லை என்றே நினைக்கிறேன்.

Wednesday, February 6, 2008

மனிதன் பாதி மிருகம்பாதி

ஊசி முதல் உயர பறக்கும் விமானம் வரை நாம் வாஙுகும் ஒவ்வொரு பொரூளூம் பலசோதனைகளூக்கு உட்பட்டு அக்மார்க் , ஐ.யெஸ்.ஐ , ஐ.யெஸ்.ஓ 9001 யென ஏகப்பட்டசான்றீதள்கள் வாங்கியவைகளாக இருப்பினும் சரியான தரத்தில் இருப்பதில்லை.ஒரு அதிகாரியும் பார்க்காமல் யாருடைய கண்ட்றோலும் இல்லாமல் ஒரு சோதனையும்இல்லாமல் ,ஒரு சர்டிபிகேட்டும் இல்லாமல் அயராது மனிதர்களை படைத்து அனுப்பிக்கொண்டு இருப்பதால் தான் மனிதர்கள் இப்படி மனிதன் பாதி மிருகம் பாதி யெனஉலவிக் கொண்டு இருக்கிறார்களோ?இதை பற்றி விசாரிக்க கடவுளை சென்று பார்க்க நான் சாக விரும்புகிறேன்