Tuesday, March 4, 2008

ஏக்கம்

ஏக்கம் என்பது வெகு நாள் ஆசை நிறைவேறாததன் வெளிப்பாடா? ஏக்கம் வந்து விட்டால் மனிதனின் தூக்கம் பறி போய் விடுமோ? தூக்கம் கெட்ட மனிதனின் மன ஊக்கம் குறைந்து விடுகிறதே. ஊக்கம் இல்லாமல் ஆக்கம் கெட்டுப் போய் நோக்கும் எதிலுமே மனம் லயிக்காமல் கடிவாளம் இல்லா குதிரை போல் மனம்காட்டிற்க்கும் மேட்டிற்க்கும் அலைகிறதே. அப்படி அலைவதால் மனமும் உடலும் நொந்து, நோயை முதலில் நாடி, அதன் பின் சாவை நாடும் முன் என் ஏக்கத்தைப் போக்கி தூக்கத்தை கொடு என்று காக்கும் கடவுளை வேண்டுவதையே வேலையாக்கிக் கொண்டிருக்கிறேன்.