மழை
வானமெனும் களந்தனிலே
மேகமெனும் வீரர்கள் தான்
கூடலெனும் போரினிலே
சிந்துகின்ற குருதிகள் தான்
மழையெனப் பெய்திடுமோ?
மாதேவன் விளையாட்டோ?
Saturday, March 1, 2008
இரண்டு மனம்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் என்று பாடினான் ஒரு கவிஞன். மனம் என்பது மூளைக்குக் கட்டுப்பட்டதா? அல்லது தனித்து இயங்கக் கூடியதா? சில நேரங்களில் மனம் நமது மூளையின் கட்டளையைக் கூட ஏற்க மறுக்கிறதே! நினைக்கவும் மறக்கவும் தெரிந்த இந்த மனத்தின் தராசுத் தட்டுக்கள் சரிசமமாக அல்லவா இருக்க வேண்டும். என் மனத்தின் நினைக்கும் தட்டு எடையே இல்லாமல் உயர்ந்தும், மறக்கும் தட்டு அதிக எடையுடன் தாழ்ந்தும் இருக்கிறதே. நினைக்க வேண்டிய பல நல்ல விஷயங்கள் வழுகி விடுகின்றன. மறக்க நினைக்கும் சில விஷயங்கள் பாறாங்கல்லாய் சம்மணம் போட்டு அமர்ந்து அழுத்துகின்றதே. தராசுத் தட்டுக்களை சரிசமப்படுத்த முடியாது என்பதால் தானோ என்னவோ ஒரு மனதை வைத்து உயிர் வாழ்வது கடினம் என்று இரண்டு மனம் கேட்டு இருக்கின்றானோ?.
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் என்று பாடினான் ஒரு கவிஞன். மனம் என்பது மூளைக்குக் கட்டுப்பட்டதா? அல்லது தனித்து இயங்கக் கூடியதா? சில நேரங்களில் மனம் நமது மூளையின் கட்டளையைக் கூட ஏற்க மறுக்கிறதே! நினைக்கவும் மறக்கவும் தெரிந்த இந்த மனத்தின் தராசுத் தட்டுக்கள் சரிசமமாக அல்லவா இருக்க வேண்டும். என் மனத்தின் நினைக்கும் தட்டு எடையே இல்லாமல் உயர்ந்தும், மறக்கும் தட்டு அதிக எடையுடன் தாழ்ந்தும் இருக்கிறதே. நினைக்க வேண்டிய பல நல்ல விஷயங்கள் வழுகி விடுகின்றன. மறக்க நினைக்கும் சில விஷயங்கள் பாறாங்கல்லாய் சம்மணம் போட்டு அமர்ந்து அழுத்துகின்றதே. தராசுத் தட்டுக்களை சரிசமப்படுத்த முடியாது என்பதால் தானோ என்னவோ ஒரு மனதை வைத்து உயிர் வாழ்வது கடினம் என்று இரண்டு மனம் கேட்டு இருக்கின்றானோ?.
Friday, February 29, 2008
மலர் அஞ்சலி
பிரபல தமிழ் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவுக்கு நான் செலுத்தும் மலர் அஞ்சலி இது.அந்தக் காலம் முதல் நேற்று வரை தமிழ் வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அவர் எழுதாத விஷயமே இல்லை எனலாம். பொரியியல், புதுக்கவிதை, மரபுக்கவிதை, தொடர்கதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி-பதில், நாடகம், சினிமா, சரித்திரம் என அனைத்துத் துறையிலும் தனது முத்திரையைப் பதித்தவர். அவர் கணிணியைப் பற்றி எளிய நடையில் சொல்லிக் கொடுத்ததை கைக்குழந்தை கூட புரிந்து கொள்ளும். அவரது சரளமான எழுத்து நடை பாமரனையும் படிக்கத் தூண்டும். அவரது கதை, கட்டுரை, கவிதைகளைப் படித்து என் இளம் பிராயத்தில் நானும் புதுக் கவிதைகள் பல எழுதி இருக்கிறேன். அவரது கணேஷ் வசந்த் பாத்திரங்கள் காலத்தால் அழியாதவை. இப்படி இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். அவரது புகழ் நிலைத்து நிற்கும் தமிழ் இனம் உள்ளவரை.
பிரபல தமிழ் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவுக்கு நான் செலுத்தும் மலர் அஞ்சலி இது.அந்தக் காலம் முதல் நேற்று வரை தமிழ் வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அவர் எழுதாத விஷயமே இல்லை எனலாம். பொரியியல், புதுக்கவிதை, மரபுக்கவிதை, தொடர்கதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி-பதில், நாடகம், சினிமா, சரித்திரம் என அனைத்துத் துறையிலும் தனது முத்திரையைப் பதித்தவர். அவர் கணிணியைப் பற்றி எளிய நடையில் சொல்லிக் கொடுத்ததை கைக்குழந்தை கூட புரிந்து கொள்ளும். அவரது சரளமான எழுத்து நடை பாமரனையும் படிக்கத் தூண்டும். அவரது கதை, கட்டுரை, கவிதைகளைப் படித்து என் இளம் பிராயத்தில் நானும் புதுக் கவிதைகள் பல எழுதி இருக்கிறேன். அவரது கணேஷ் வசந்த் பாத்திரங்கள் காலத்தால் அழியாதவை. இப்படி இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். அவரது புகழ் நிலைத்து நிற்கும் தமிழ் இனம் உள்ளவரை.
Thursday, February 28, 2008
இனியொரு உலகம் இறைவனால் படைக்கப்பட்ட இந்த உலகத்தை மனிதன் தாறுமாறாக மாற்றி அமைத்து விட்டதால் நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் வேறு ஒரு புதிய உலகைப் படைக்க வேண்டி. அந்தப் புது உலகத்தில் வற்றாத நதியும், ஆறும், நீர்வீழ்ச்சியும் வேண்டும். வெட்ட முடியாத மரம் செடி கொடிகள் வேண்டும். என்றுமே வாடாத மலர்கள் வேண்டும். மாசு இல்லாத காற்று வேண்டும். மனிதனை மனிதன் நேசிக்கும் நல்ல இதயம் வேண்டும். அராஜகப் போக்குடன் அரசியல் செய்பவர்கள் இல்லாமல் அந்தந்த ஊரில் வசிப்பவர்கள் அவர்களுக்குள் வரிவசூல் செய்து அந்தந்த ஊரில் அவர்களது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். ஆணுக்குப் பெண் அடிமை என்றில்லாமல் ஆணும் பெண்ணும் சமமாக இருக்க வேண்டும். அடிக்கும் கைகள் இல்லாமல் அணைக்கும் கைகள் மட்டுமே வேண்டும். எங்கும் எதிலும் இன்பமே வேண்டும். மனிதர்கள் நோய் நொடி இல்லாமல் இறக்கும் பொழுதும் சிரிக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)