Saturday, October 18, 2008

அரிது........அரிது

அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது என்று அந்தக் காலத்தில் யாரோ சொல்லி

விட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால் இவ்வுலகில் , இல்லை...... இல்லை.......

இந்தியாவில் மானிடராய் பிறப்பது எளிது. அதிலும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறப்பது

என்பது மிகவும் எளிது.


நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்து . நாட்டு நடப்பை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல்

வளர்ந்து . நாலு பேர் மெச்சிக் கொள்ளும் விதமாய் நல்ல மனிதன் என்று பெயர் எடுப்பது

தான் மிகவும் கடினம்.

இந்த அக்னி பரீட்சையில் தன்னைத் தானே உட்படுத்திக் கொண்டு உயிருடன்

வெளிவருவதற்கு முன்பாக ஒவ்வொரு மனிதனும் படும்பாட்டை வார்த்தைகளில் வடிக்க

வேண்டும் என்றால் இந்த ஜென்மம் ஒன்று போதாது.


இவ்வளவு அரிதான மானிட ஜென்மம் எடுத்து கஷ்டப்படுவதை விட மானிடராய்

பிறக்காமல் இருப்பதே மிகவும் அரிதாகும்.

No comments: