Tuesday, March 4, 2008
பொறுத்திரு மனமே
கடல் மணலையும், விண்மீன்களையும் எண்ண முடியுமா? கடல் அலைகளை கை கொண்டு நிறுத்த முடியுமா? காற்றை கண் கொண்டு பார்க்க இயலுமா? கற்பனையில் மட்டுமே வாழ முடியுமா? கனவை படம் பிடித்து பார்க்க இயலுமா? கண்ணாடியில் நாம் பார்க்க அதில் வேறு முகம் தெரியுமா? நெருப்பை மட்டுமே உணவாக கொள்ள முடியுமா? கடந்து போன நேரத்தை மீட்டு வர முடியுமா? இருட்டில் இருந்து கொண்டு படிக்க முடியுமா? வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை திரும்பி வரச் செய்ய முடியுமா? இவையெல்லாம் என்றைக்கு சாத்தியமாகிறதோ அன்றைக்கு ஒரு பெண்ணின் மன ஆழத்தையும், எண்ணங்களையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அது வரை மனமே உன்னல் முடிந்தால் பொறுத்திரு.