Friday, February 15, 2008

பணம் --- பெண்
அன்று முதல் இன்று வரை பணத்திற்கும் பெண்ணிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்து வருகின்றன.பெண்ணை லஷ்மி என்றும் பணத்தை மகாலஷ்மி என்றும் சொல்வர். நிறைய பணத்தை சேர்க்க நினைத்தவனுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை நேசித்தவனுக்கும் வாழ்க்கையில் என்றுமே நிம்மதி இருந்ததில்லை.பணமும் பெண்ணும் வாழ்க்கையில் வருவதும் தெரியாது போவதும் தெரியாது.வாழ்க்கையின் கடைசி வரை வருவதற்கு பணத்திற்க்கும் சரி பெண்ணிற்கும் சரிஉத்தரவாதம் கிடையாது.பணத்தையும் பெண்ணையும் வெறுத்து மறந்தவனை ஈஷ்வரன் என்கின்றனர்.இரண்டையும் கட்டிக் காத்து வாழ்பவனை கோடீஷ்வரன் என்கின்றனர்.எந்த ஒரு ஆணின் வாழ்க்கையிலும் இந்த இரண்டில் எது இல்லையென்றாலும்அவனது வாழ்வை நரகம் என்கின்றனர்.

2 comments:

Anonymous said...

//எந்த ஒரு ஆணின் வாழ்க்கையிலும் இந்த இரண்டில் எது இல்லையென்றாலும்அவனது வாழ்வை நரகம் என்கின்றனர்.//


என்கின்றனர்...என்கின்றனர்...என்று சொல்கிறீர்களே?
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்??
அன்புடன் அருணா

நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில் said...

விமர்சிப்பீர்கள் என்று பார்த்தால் வினா எழுப்புகிறீர்களே அருணா